Friday, January 7, 2011

மழை வேட்டல்

நின் உதடு

பெரிது

பிரபஞ்சம் முழுவதும்

முத்தமிட ஏதுவானது

இங்கே

விசும்பும் கணம் நோக்கி

வேர்முடிச்சுகளில்

கண்ணீர் வாங்கி

புழுங்கி அழுகிறதுநிலம்

வெப்பங்குடித்து

மேனி சுருங்கி

கிழவியாயின தாவர இலைகள்

நீர் வேட்கையில்

வியர்வைத்துவாரம்அடைந்து

நாற்றமெடுக்கிறது

மனிதர் குருதி

தகிக்கும்கதிரொளியில்

உன் நீர்மைத்துளிகளைக்கண்ணுற்று

கழுத்தை நெரித்துபெய்யச் சொல்ல

இயலாத நான் -

வாடிய புளியமரத்தடியில்

ஈரத்துணியாய்என்னை

கசக்கிப்பிழியுமுன்

நீபொழி

பேரோலமெடுத்து

முத்தமிடு!-

வே. ராமசாமி

No comments: