மழை வேட்டல்
நின் உதடு
பெரிது
பிரபஞ்சம் முழுவதும்
முத்தமிட ஏதுவானது
இங்கே
விசும்பும் கணம் நோக்கி
வேர்முடிச்சுகளில்
கண்ணீர் வாங்கி
புழுங்கி அழுகிறதுநிலம்
வெப்பங்குடித்து
மேனி சுருங்கி
கிழவியாயின தாவர இலைகள்
நீர் வேட்கையில்
வியர்வைத்துவாரம்அடைந்து
நாற்றமெடுக்கிறது
மனிதர் குருதி
தகிக்கும்கதிரொளியில்
உன் நீர்மைத்துளிகளைக்கண்ணுற்று
கழுத்தை நெரித்துபெய்யச் சொல்ல
இயலாத நான் -
வாடிய புளியமரத்தடியில்
ஈரத்துணியாய்என்னை
கசக்கிப்பிழியுமுன்
நீபொழி
பேரோலமெடுத்து
முத்தமிடு!-
வே. ராமசாமி
No comments:
Post a Comment